உள்ளாட்சி தேர்தல் திகதியை முடிவுசெய்ய அடுத்த வாரம் சிறப்புக் கூட்டத்தை கூட்டுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசேட கூட்டமொன்றை மார்ச் 07ஆம் திகதி (செவ்வாய்கிழமை) கூட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று காலை ஆணைக்குழு உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து புதிய தேர்தல் திகதியை அறிவிப்பது ஒத்திவைக்கப்பட்டது.

இதனடிப்படையில், எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...