கொட்டகலை நகரில் தீ விபத்து ; இரண்டு கடைகள் எரிந்து நாசம்!

Date:

கொட்டகலை நகரில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் சம்பவத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள தளபாட வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று (05) இரவு சுமார் 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ ஏற்படும் போது வர்த்தக நிலையத்தில் எவரும் இல்லாததனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

இதனால் கடைகளிலிருந்த பெறுமதிமிக்க தளபாடங்கள் உட்பட பல வர்த்தக பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு பிரதேச வாசிகள் இரானுவத்தினர்.மற்றும் திம்புல்ல பத்தனை பொலிஸார் இணைந்து பாரிய பிராயத்தனத்தினை மேற்கொண்ட போதிலும் தீ வேகமாக பரவியதன் காரணமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

தீ ஏற்பட்ட போது பிரதேச வாசிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர்.தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த தீயணைப்பு இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவித்தாக பொது மக்கள் தெரிவித்ததுடன் உரிய நேரத்திற்கு தீயணைப்பு பிரிவு வராமையே பாரிய சேதம் ஏற்பட்டதாகவும் கவலை தெரிவித்தனர்.

எது எவ்வாறான போதிலும் பொலிஸார் இரானும் மற்றும் பொது மக்கள் இணைந்து ஏனைய வீடுகளுக்கும் கடைகளுக்கு தீ பரவுவதனை கட்டுப்படுத்தினர்.

தீ ஏற்பட்;டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.தீ ஏற்படுவதற்கான காரணத்தினையும் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் திம்புல்ல பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...