தயாசிறி குறித்து வெளிவந்த செய்தி உண்மையா

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தி முற்றிலும் பொய்யானது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாசிறி ஜயசேகர இந்த நாட்களில் தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ளதுடன், அவர் நாடு திரும்பும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமாக கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகரவுடன் கலந்துரையாடியதன் பின்னர் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கினார்.

கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு பல கடமைகள் இருப்பதால், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயாசிறி ஜயசேகர நாடு திரும்பும் வரை பதில் செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...