பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் இடம்பெற்ற போராட்டங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.