நுரைச்சோலை அனல்மின் நிலையம் பாதிப்பு

Date:

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பழுதடைந்துள்ள மூன்றாவது ஜெனரேட்டரை மீள ஆரம்பிக்க சுமார் 12 நாட்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அந்த இயந்திரத்தின் கொதிகலனின் நீர் குழாய் வெடித்துள்ளதாக அதன் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக இயந்திரத்தை பழுது பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது ஜெனரேட்டரின் பராமரிப்புப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் மின் நிலையங்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், இதன் காரணமாக மின்வெட்டு ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...