அடுத்த பொது வேட்பாளர் சஜித் ; ஐ.தே.கவுக்கும் அழைப்பு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் தேர்தல்களில் அமைக்கப்படும் புதிய கூட்டணியானது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியாகவே இருக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் இந்தக் கூட்டணியில் இணையலாம். ஐக்கிய தேசியக் கட்சியானது கூட்டணியில் ஒரு சிறிய கட்சியாக இணைய முடியும். ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது ஒரு சிறிய கட்சியாகும். ஏனெனில் அக்கட்சிக்கு உள்ள வாக்கு சதவீதம் மிகக்குறைவாகும்.

எமது பாரிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருப்பார்” – எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கேஸ் விலை உயர்வு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு...

நாடு திரும்புகிறார் ரணில்!

சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

ஒரு வாரத்தில் 500 லட்சம் பணம் தேடுவேன் – லால்

புதிய சொகுசு வீடு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட சர்ச்சைக்கு...

மோசடி தொடர்பில் LNW வாசகர்களுக்கு எச்சரிக்கை!

அன்புடைய வாசகர்களே, இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா?...