உள்ளூராட்சி தேர்தலுக்காக இதுவரை ரூ.375 மில்லியன் செலவு!

Date:

கடந்த மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நிமித்தம் ஏற்கனவே வழங்கிய உத்தரவுகளுக்காக தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்த வேண்டிய 375 மில்லியன் ரூபா கடனை செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரிக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

திறைசேரி ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ரூபா 188 மில்லியனை விடுவித்திருந்த போதிலும், வாக்குச் சீட்டுகள் அச்சிடுதல், இதர செலவுகள் என ஏற்கனவே வழங்கிய உத்தரவுகளுக்காக மேலும் 375 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.

புதிய திகதி எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...