உள்ளூராட்சி தேர்தலுக்கு புதிய திகதி அறிவிக்கப்படும்?

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான நிதி கிடைக்கும் வரை புதிய திகதி அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

“அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் பேசினேன். கண்காணிப்பு அமைப்புகளிடம் பேசினேன். அரசிடம் பேசினேன். வேறு யாரிடம் பேச வேண்டும்? அவர்களுடன் பேசி, அவர்களும் ஒப்புக்கொண்டனர். இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் முக்கியமாக நிதி உள்ளிட்ட மற்ற வளங்கள் தடைபட்டுள்ளன. அதுபற்றியும் பேசியுள்ளோம். நிதி அமைச்சகத்திடம் பேசினோம், அரசுடன் பேசினோம்… வேறு யாரிடம் பேசுவது? என்று நிமல் புஞ்சிஹேவா கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வி – புத்தாண்டில் என்ன செய்கிறீர்கள்? மீண்டும் திகதியை அறிவிப்பீர்களா?

இப்போது இதை திகதியாக அறிவித்து, மீண்டும் ஒத்திவைத்து, மீண்டும் திகதியை அறிவித்தோம், மீண்டும் தள்ளிப் போனது.. பிறகு அது நகைச்சுவையாகிறது. எங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் திகதி அறிவிக்கப்படும். பிறகு அது அவர்களுக்கும் நல்லதல்ல. எனவேதான் இதற்கான பணத்தை குறிப்பிட்ட காலத்திலாவது வழங்குமாறு அமைச்சரவையில் தலையிடுமாறு பிரதமரிடம் கோரினோம். அது கிடைத்தால் அந்த திகதியில் தேர்தலை நடத்தலாம். மற்றபடி இது தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளின்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அதற்கேற்ப திகதியை நிர்ணயம் செய்தால், அந்த திகதியில் வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...