காலி முகத்திடல் போராட்டம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம்

Date:

போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஆளும் தரப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முறையான கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் நடந்த போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து, பணம் செலவழித்து ஆதரவு அளித்தவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும் என்றார்.

பல்வேறு நபர்களால் எழுதப்பட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளை முழுமையாக உண்மை என ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

போராட்டத்தின் போது வன்முறையின் போது முப்படையினரும் மௌனமாக செயற்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அவர்களுக்கு யார் உத்தரவு பிறப்பித்தது என்பதும் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களை தூண்டி விட்டு நாட்டின் சகல செயற்பாடுகளும் சீர்குலைந்துள்ள இந்த பருவத்தில் உண்மையான தகவல்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும், நாட்டை இவ்வாறான நிலைக்கு தள்ளும் நபர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...