இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க எமிரேட்ஸ் விமான சேவையுடன் புதிய ஒப்பந்தம்!

Date:

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எமிரேட்ஸ் விமான சேவை தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நாட்டின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல முன்முயற்சிகளை உள்ளடக்கியது.

ஒப்பந்தம் கைக்காத்திடும் நிகழ்வில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தூதுவர் உதய இந்திரரத்ன, எமிரேட்ஸின் பிரதம வர்த்தக அதிகாரி அட்னான் காசிம் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவு எமிரேட்ஸ் முகாமையாளர் சந்தன டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், எமிரேட்ஸ் தனது உலகளாவிய வலையமைப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலங்கை குறித்து காட்சிப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி செல்லும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...