கள்ள நோட்டில் நீதிமன்ற அபராதம் செலுத்திய நபர் கைது

Date:

போலி நாணயத்தாள்களுடன் நீதிமன்ற அபராதத்தை செலுத்த முற்பட்ட 39 வயதுடைய நபரொருவர் மஹியங்கனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, கிரந்துருகொட்டா பகுதியைச் சேர்ந்த சந்தேக கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 போலி நாணயத்தாள்களை 21,000 ரூபா அபராதத்துடன் அவர் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்தினார்.

இதன்படி, கைது செய்யப்பட்டவர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, களுத்துறை பிரதேசத்தில் போலியான 5000 ரூபா பணத்துடன் பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணையில், களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து 5,000 ரூபாய் நோட்டுகள் 11 மற்றும் அச்சு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.

47 வயதான தம்பதியினர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...