செந்தில் தொண்டமானுக்கு ஆளுநர் அரியாசனம் உறுதி!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் ஊவா மாகாணத்தின் முன்னாள் பதில் முதலமைச்சருமான முத்துவிநாயகம் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை 17ம் திகதி மூன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அதில் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வடக்கு மாகாண ஆளுநராக அரசு நிர்வாக சேவையில் உள்ள தமிழ் பெண்மணி ஒருவரும் வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...