சமூக வலைத்தளங்களில் பிரபலமான பிக்கு ராஜாங்கனே சத்தாதிஸ்ஸ தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மேற்படி தேரர் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.