பிளவுக்கு முடிவு கட்டும் வகையில் புதிய மொட்டு அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி முடிவு

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய நாட்களில் ஜனாதிபதிக்கும் மொட்டுவிற்கும் இடையில் சில முறுகல் நிலை காணப்பட்டமை யாவரும் அறிந்ததே.

குறிப்பாக கடந்த வாரத்தில் இதை வெளிப்படையாகப் பார்த்திருக்கலாம். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் அமைச்சு பதவிகள் வழங்காததுதான்.

ஏனெனில், இந்த அமைச்சரவைத் திருத்தம் 2022 அக்டோபரிலிருந்து நடந்து வரும் கதை. பட்ஜெட்டுக்கு முன், பட்ஜெட்டுக்கு பின், ஜனவரிக்கு முன், ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம், சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன், IMF அனுமதி கிடைத்த பின்… என பல சந்தர்ப்பங்களில் இது ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதைய நிலைமைக்கு ஏற்ப அமைச்சரவை அதிகரிக்கப்படுவதை மக்கள் விரும்பாத நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்கு ஜனாதிபதியும் இணங்கவில்லை என ஜனாதிபதி தரப்பு வட்டாரங்கள் தொடர்ந்தும் தெரிவித்தன.

ஆனால் மொட்டு தரப்பில் இருந்து, அவரது மாவட்டத் தலைவர்கள் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் கேபினட் அமைச்சர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டது.

இந்தப் பிரச்சினையால் அரசாங்கம் பிளவுபடும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால், இறுதியில் அந்த பிரச்சனை தற்போது தீர்ந்தது.

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மொட்டு பலத்த அழுத்தத்தினால் மொட்டுக் குழுவொன்றிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுப் பயணத்திற்குச் செல்வதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரிடம் தெரிவித்ததாகக் கேட்கப்படுகிறது.

ஜனாதிபதி பிரான்சில் இருந்து நாடு திரும்பியதும், ஆறு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...