காலி, கொஸ்கொட, ஹிதர்வ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவருக்கு நெருக்கமான விஜித் என்ற ‘கொஸ்கொட ரன்’ 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை இவர் தனது வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோமாகம பிரதேசத்திலும் நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.