தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக R.M.A.L.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B.தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.