ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்க இடமளியோம்

Date:

ஒரு கட்சியாக சர்வதேச நாணய நிதியம் விடயத்தில் ஒன்றிணைய வேண்டும் என சமகி ஜன பலவேக கூறியதாகவும், அவ்வாறு கூறுவது சரியென்றாலும் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தவறு எனவும், இந்த உடன்படிக்கை வலுவற்றதாகவும், பொருளற்றதாகவும் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

சர்வதேச அளவில் பேசக்கூடிய நபர் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், ஐ. எம். எப் மூலம் கிண்ணத்தை வெல்ல முடியாது, பேச்சாலும் பெருமையாலும் கிண்ணத்தை வெல்ல முடியாது செயலில் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (29) தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட சக்வல திட்டத்தின் முப்பத்து மூன்றாம் கட்டமாக அம்பிலிப்பிட்டிய உடவலவ மகா வித்தியாலயத்திற்கு சிநேகபூர்வ வகுப்பறையொன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சக்வால மூலம் 32 பாடசாலைகளில் ரூ.27,986,150 மதிப்பில் நட்புறவு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சக்வல ஊடாக பாடசாலைகளுக்கு 349,20,000 ரூபா பெறுமதியான 72 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்க்கட்சியின் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 வைத்தியசாலைகளுக்கு 171,966,900 ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐ. எம். எப் நிறுவனத்தில் இருந்து பில்லியன் கணக்கான டொலர்களை எடுக்க முடியும் என்ற போதிலும், முக்கியமான புவியியல் அமைவிடத்தைக் கொண்ட எமது நாட்டினால் அவ்வாறானதொன்றை ஏன் செய்ய முடியவில்லை என்பது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

உழைக்கும் மக்களின் வைப்புநிதி சேமிப்பு EPF ETF-ஐ கூட மறுசீரமைக்க தயாராக உள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். உள்ளூர் கடனை மறுசீரமைக்க மாட்டோம் என்று கூறியிருந்தும் தற்போது அதனை செய்கின்றார்கள். இந்நாட்டு உழைக்கும் மக்கள் பணிக் காலத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அதைச் செய்த பிறகு நாடு திவாலாகிறது, ஐஎம்எப் உடன் அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்யாமல் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணம் கூட எடுக்கப்படுகிறது.

இவ்வாறு பொய்களை கூறி மக்களை ஏன் ஏமாற்றுகின்றீர்கள் என தான் கேட்கிறேன் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த நாட்டில் உள்ள 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக சமகி ஜன பலவேக நிற்கும் எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...