நீதிபதி வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு

Date:

ஊராபொல போபத்த பிரதேசத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் இருந்து ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்களும் ஆறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தணகல்ல பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் திருட்டு நடந்தபோது நீதிபதி வீட்டில் இல்லை என்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பொலிசார் நடத்திய விசாரணையில், வீட்டின் அலமாரியில் இருந்த சிறிய பெட்டகத்திலிருந்து தங்கப் பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பிரகாரம், அத்தனகல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் யசேந்திர நாலக தலைமையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...