மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் சம்பந்தன் ஏன் கையொப்பம் இடவில்லை?

Date:

மக்கள் ஆணையை பெறாதவர்கள் எதனை வேண்டுமானாலும் கோரலாம் மக்கள் ஆணையைப் பெற்ற நாம் அந்த ஆணைக்கு  மாறாக செயல்பட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயார் செய்யும் கடிதம் தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் சிபாரிசை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மீண்டும் ஏற்க மறுப்பதனால் அக் கடிதத்தில் இரா.சம்பந்தன் ஒப்பமிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மறுப்பு தெரிவித்தமை தொடர்பிலேயே இரா.சம்பந்தன் மேலும் கூறியதாவது,

தமிழர்களின் இனப் பிரச்சினை விடயத்தில் 13 தீர்வல்ல. அதனையும் தாண்டிய சமஸ்டி அடிப்படையிலான தீர்வே தமிழர்களின் அபிலாசையாகவும் அதற்கே மக்கள் ஆணை வழங்கியதனால் அதனையே நாம் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். வெறுமனே 13ஐ மட்டும் கோரி நிற்க முடியாது என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் கடிதத்தில் திருத்தம் செய்து அனுப்ப கோரியதாகவும் அதனை ஏற்க கூட்டணி மறுத்ததாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...

முட்டை விலை குறைப்பு

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை...