பிரதான வீதிகளில் 260ற்கும் அதிகமான பாலங்கள் மோசமான நிலையில்

Date:

நாட்டின் பிரதான வீதி அமைப்பில் விரிவாக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்தப் பாலங்களை விரிவுபடுத்த 15.3 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் குறிப்பிட்டார்.

மேலும், 135 பாழடைந்த பாலங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றை புனரமைப்பதற்கு 12.3 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாலம் புனரமைப்புக்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒதுக்கீடுகள் கிடைத்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் பாலத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என சர்தா வீரகோன் தெரிவித்தார்.

அண்மையில் பொலன்னறுவை – மானம்பிட்டிய கொட்டாலேய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஓடையில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பாலம் குறுகலாக உள்ளதால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவது தெரியவந்தது.

இந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...