இரண்டு மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் குறைப்பு

0
137

தொடர்ந்தும் வரட்சியான காலநிலை காரணமாக கண்டி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிக நீர் பாவனையைக் கொண்ட குருநாகல் நகருக்கான நீர் விநியோகம் முன்னர் மட்டுப்படுத்தப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here