இராஜாங்க அமைச்சர்கள் விடுக்கும் கோரிக்கை

Date:

அமைச்சரவை அமைச்சர்கள் தமது அமைச்சுக்களுக்கான பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்காத காரணத்தினால் அரசாங்கத்திற்குள் சில பிரச்சினைகள் தலைதூக்குவது இரகசியமல்ல.

அண்மைய நாட்களில் சில இராஜாங்க அமைச்சர்கள் இது குறித்து பொதுவெளியில் பேசியிருந்தனர்.

இந்நிலைமை காரணமாக வர்த்தமானி மூலம் நிறுவனங்கள் ஒதுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்க இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.

நேற்று ஒரு இராஜாங்க அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய சுமார் 22 இராஜாங்க அமைச்சர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சுக்களின் பொறுப்புகள் தமக்கே வழங்கப்பட்டுள்ளதால், அந்த விடயங்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதியின் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஏனைய இராஜாங்க அமைச்சர்கள் தமது நிறுவனங்களை வர்த்தமானியில் அறிவித்து தனியான அமைச்சுச் செயலாளர்களை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தயாராக உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா முக்கிய அறிவிப்பு

எல்லை நிர்ணயச் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத்...

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...