இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Date:

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை 7.0 ரிக்டர் அளவில் சக்சி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இருந்ததாகவும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவே, அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா, பங்சல் அருகே நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அடியில் 525 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா முக்கிய அறிவிப்பு

எல்லை நிர்ணயச் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத்...

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...