வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தம்

Date:

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா விடுத்துள்ள அறிவிப்பின்படி, மேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் கணனி முறைமை புதுப்பித்துள்ளமையினால், குறித்த செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதி வரை வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும், செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை அபராதமின்றி மீளப்பெற முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளத்தை அணுகுவதன் மூலம், ஆன்லைன் முறையின் கீழ் வாகன வருமான உரிமங்களைப் பெறுவது செப்டம்பர் 24 நள்ளிரவு முதல் அக்டோபர் 6 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...