இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய ஒன்பது ஈரானியர்களுக்கு மரண தண்டனை

0
73

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் நான்கு வருடங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட ஒன்பது ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை செய்து கொண்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க செயற்படுவதால், ஒன்பது வெளிநாட்டு பிரஜைகளையும் ஈரானுக்கு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அக்குரலைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் இழுவை படகில் ஹெரோனை இலங்கைக்குகள் கடத்த முற்பட்ட போது இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here