தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை வென்ற ‘ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ்

Date:

தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை ‘ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ் வென்றுள்ளது.

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா விருது விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த வணிக வகுப்பு விருதையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வென்றுள்ளது.

விமான நிறுவனங்கள் மற்றும் விமானத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விருதுகளுக்காக வாக்களிக்கப்படுகின்றன.

கடந்த வருடம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அதிதிகளால் தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் சிறந்த விமான சேவைக்கான விருதையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ் விமான சேரவக்கான பல விருதுகளை வென்றாலும், பல்வேறு கடன் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அதன் செயல்பாடுகள் இடம்பெறுவதாக அரசாங்கம் தொடர்ந்து கூறிவருவதுடன், பல சந்தர்ப்பங்களில் ‘ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸை தனியார்மயப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று விமான சேவையை முன்னெடுக்க போதியளவு விமானங்கள் இன்மையால் கடந்த சில வாரங்களாக ‘ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸின் விமானங்கள் தாமதாக சென்றதால் பயணிகள் பல அசௌகரியங்களுக்கும் முகங்கொடுத்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...