செங்கோலை அவமதித்த அஜித் மானப்பெரும சபையில் இருந்து விரட்டி அடிப்பு!  

Date:

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும பாராளுமன்ற அவையில் இருந்த போது செங்கோலை தொட்டதன் காரணமாக 4 வாரங்களுக்கு பாராளுமன்ற சேவையை இடைநிறுத்துவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபைக்குள் இருக்கும் போது செங்கோலை தொடுவது பாரிய ஒழுக்கக் கேடான செயலாகும் என தெரிவித்த சபாநாயகர், அதனடிப்படையில் இன்று (19) முதல் நான்கு வார காலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கமான முறையில் செயற்பட வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், வாய்மூல கேள்விகளின் போது ஏற்பட்ட பதற்ற சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கவும் ஏற்பாடு செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...