இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; ஹமாஸின் மூத்த தலைவர் பலி

Date:

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த தலைவர் ஜெஹாத் மெய்சன் கொல்லப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தில் காஸா உட்பட சில பகுதிகளில் செயல்பட்டுவரும் ஹமாஸ் தலைமையிலான தேசிய பாதுகாப்புப் படை இயங்கிவருகிறது. இதன் மூத்த தலைவராக ஜெஹாத் மெய்சன் செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில், இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஜெஹாத் மெய்சன் அவரது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டுள்ளார்.

காஸாவின் ஷேக் ரத்வான் சுற்றுப்புறத்தில் நடந்த தாக்குதலிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீன போர் 13ஆவது நாளை எட்டியுள்ளது. போரால் காஸாவில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர்.

இது காஸாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியாகும். இரு தரப்பிலும் 5,000 பேர் வரை இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் வேண்டுகோளுக்கு இணங்க காஸாவிற்குள் வரையறுக்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...