ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ். விஜயம்!

Date:

இலங்கை ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஆதிவாசிகள் தலைவர் குரு வலத்து வர்மே வலத்த முதன் தலைமையிலான ஆதிவாசிகள் குழுவினர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கையின் மஹியங்கனையில் வசித்து வருகின்ற ஆதிவாசிகள் குழுவினர் இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் வந்தனர்.

காலையில் வவுனியாவில் அவர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மதியம் யாழ்ப்பாணத்த வந்தனர்.

யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின் பல்வேறு பிரசித்தி பெற்ற இடங்களைச் சுற்றிப் பார்வையிடவுள்ள அவர்கள், இங்குள்ள ஆலயங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

ஆதிவாசிகளின் தலைவர் தலைமையிலான இந்தக் குழுவில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை குடும்பம் குடும்பமாகவே பலரும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...