7 நாட்டுப் பிரஜைகளுக்கு இலவச விசா

Date:

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 2024 மார்ச் 31 வரை விசா இன்றி நுழைய அனுமதிக்கும் முன்னோடித் திட்டத்தை இலங்கை அமைச்சரவை அனுமதித்துள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த விசா விலக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குப் பொருந்தும். உடனடியாக அமலுக்கு வரும் என்று அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில எழுதினார்.

“இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு முன்னோடித் திட்டமாக மார்ச் 31 வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விசா இலவசம் என்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்று பெர்னாண்டோ பதிவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...