ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை கொடுத்து பார்க்குமாறு அநுர கோரிக்கை

0
151

அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க வேண்டுகோள் விடுக்கிறார்.

ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், எடுத்த முடிவு தவறாக இருந்தாலும் வருந்தக் கூடாது என்றும் அவர் கூறினார்.

எழுபத்தைந்து ஆண்டுகளாக தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால், மீண்டும் ஐந்தாண்டு சோதனைக்கான நேரம் வந்துவிட்டது என்றார்.

தற்போதுள்ள அமைப்பை மாற்றுவதற்கு நம்பக்கூடிய ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தேசிய மக்கள் சக்தியினால் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here