அமைச்சரவை மாற்றம்; ஜனாதிபதி மீது பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி

Date:

அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டுசெல்ல ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காவிட்டால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மக்களின் பணத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பொதுஜன பெரமுனவின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். என்றாலும், ஜனாதிபதி அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.

இம்முறையும் ஜனாதிபதி தமது கோரிக்கைகளை நிராகரித்துள்ளதால் பொதுஜன பெரமுனவின் தலைமை ஜனாதிபதி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...