ராஜாங்கனே சத்தரதன தேரரை கைது செய்ய உத்தரவு

Date:

ராஜாங்கனே சத்தரதன தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்புவது தொடர்பில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தேரர் நீதிமன்றில் ஆஜராகாதமையே இதற்குக் காரணம்.

இந்த வழக்கில் ராஜாங்கனே சதாரதன தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இருந்த போதிலும் தேரர் இன்று நீதிமன்றில் ஆஜராகாததால் நீதவான் பிடியாணை பிறப்பித்ததுடன் தேரர்க்கு வெளிநாடு செல்ல தடை விதித்து குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ராஜாங்கனே சத்தாரதன தேரருக்கு கிடைத்த பணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...