திருகோணஸ்வரத்தில் ஆசி பெற்ற நிர்மலா சீதாராமன் State bank of India கிளையையும் திறந்துவைத்தார்

Date:

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருகோணஸ்வரம் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபுட்டார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளிலேயே இந்திய நிதி அமைச்சர் கலந்துகொண்டார்.

இதேவேளை, திருகோணமலையில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களையும் இந்திய நிதி அமைச்சர் பார்வையிட்டதுடன், திருகோணமலையில் உள்ள ஐ.ஓ.சி தலைமையகத்துக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.

திருகோணமலையில் State bank of india புதிய கிளை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbook நிர்மலா சீதாராமனால் செந்தில் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...