நேற்று வியாழன் (30) இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு ரயில் கோண்டாவில் பகுதியைக் கடந்த போது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசியுள்ளனர்.
பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு சேவை அதிகாரிகள் உடனடியாக சோதனை மேற்கொண்டனர்.
சந்தேக நபர்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஒரு பெட்டியில் உள்ள கண்ணாடி சேதமடைந்துள்ளது.
ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், பொறுப்பான நபர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் பொலீசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.