யாழ். சென்ற ரயில் மீது கல் வீச்சுத் தாக்குதல்

Date:

நேற்று வியாழன் (30) இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு ரயில் கோண்டாவில் பகுதியைக் கடந்த போது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசியுள்ளனர்.

பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு சேவை அதிகாரிகள் உடனடியாக சோதனை மேற்கொண்டனர்.

சந்தேக நபர்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஒரு பெட்டியில் உள்ள கண்ணாடி சேதமடைந்துள்ளது.

ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், பொறுப்பான நபர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் பொலீசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...