எனது ஆதரவு ரணிலுக்கே – மொட்டுக் கட்சி இராஜாங்க அமைச்சர்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

“இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியின் தலைமைத்துவம் இந்த நாட்டிற்குத் தேவை. அதற்கான காரணத்தை நான் காண்கிறேன், ஒன்று, நாம் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தியிருந்தாலும், பொறுப்பற்ற முறையில் பிரபலமான தலைப்புகளில் சென்று அந்த மேடைகளில் பேசப்படும் விஷயங்களைப் பற்றி பேசினால், இந்த நாடு அதலபாதாளத்தை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.

கேள்வி – அப்படியென்றால் அடுத்த தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வரவேண்டும் என்று அர்த்தமா?

“அடுத்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வர வேண்டும். ஏனெனில் இந்த ஆபத்தான மற்றும் சிக்கலான செயல்முறையிலிருந்து நாம் இன்னும் வெளியே வரவில்லை. இந்த திட்டத்தை யாரும் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது” என்றார்.

கேள்வி – அப்படியென்றால் ஜனாதிபதித் தேர்தலின் போது நீங்களும் உங்கள் அணியும் நிச்சயமாக ரணிலுக்கு ஆதரவாக நிற்பீர்கள் என்று அர்த்தமா?

“நிற்க வேண்டும்” என தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...