தமிழர்களின்வாக்குகள் சஜித்துக்கே!

Date:

“ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையே ஆதரிப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள். அந்த மக்களின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் வடக்கு – கிழக்கு மக்களின் அதிகூடிய வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்தன. எனினும், தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த இரட்டை நிலைப்பாடுகளால் அவரால் அந்தத் தேர்தலில் வெல்ல முடியாமல் போய்விட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அந்தக் குழப்பம் இருக்கமாட்டாது. சிங்கள மக்கள் தெளிவடைந்து விட்டார்கள். அவர்கள் உண்மை நிலையைப் புரிந்துவிட்டார்கள். அடுத்த தடவை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாஸவையே ஆதரிப்பார்ப்பார்கள். அவருக்கு அமோக வெற்றி கிடைக்கும்.

மொட்டுக் கட்சி வேட்பாளரோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரோ அல்லது ஜே.வி.பி. வேட்பாளரோ ஜனாதிபதியாக வருவதை நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள். சஜித் என்ற ஒரே தலைவரால் – ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே இந்த நாட்டுக்கு விடிவு கிடைக்கும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon...

சஜித் சிங்கப்பூர் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...