இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் சுனாமி ஏற்படும் அபாயம் இருக்காது என வானிலை ஆய்வு பிரிவின் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.