ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை

0
38

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

5 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்தை அவமதிக்கும் tகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார் என போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததுடன், அவர் கடந்த டிசம்பர் முதலாம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து டிசம்பர் 29ஆம் திகதி இலங்கை வந்தடைந்திருந்தார். நாடு திரும்பி 48 மணநேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here