தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பு

Date:

வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்களும் 3 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 42 சதவீதம் அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 3 வீதத்தால் மட்டுமே அதிகரிப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணைய வசதிகளுக்கு ஏற்கனவே 15 வீதம் வற் வரி அறவிடப்படுவதாகவும், புதிய வரித் திருத்தத்தின் கீழ் 3 வீதம் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் 42 வீதம் உயர்வடைந்துள்ளதாக போலியான செய்திகள் பரப்படுகின்றதாகவும் அதனை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...