யாழில் கடற்றொழிலுக்குச் சென்ற5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Date:

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே சாவடைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேற்படி நபர் உட்பட மூவர் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்றனர்.

இதன்போது  அமலசூரி அன்ரனியூட் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவருடன் சென்றவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சேர்த்தனர்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இன்னும் 10 வருடங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு கடினம்

வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும்...

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...