இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா நியமனம்

0
203

வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான சேனுகா செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று (05) தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி ரௌபதி மோமுரிடம் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக, இந்திய ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, மிலிந்த மொரகொட அந்தப் பதவியை வகித்தார்.அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here