சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வு சேவைத் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இன்று (07) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

CID காவலில் இருக்கும் போது தமக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்திருந்ததாகவும், அதற்கு எதிர்ப்பாக சில நாட்களுக்கு முன்பிருந்து மரணம்வரை நீடிக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.  

வெள்ளிக்கிழமை முதல் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இதன் காரணமாக இன்று இரவு அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

சுரேஷ் சலே, 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டு தற்போது CID விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

செம்மணிப் பேரவலம்! தீவிரமடையும் அகழ்வுப் பணிகள்

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித...

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...