இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு: திருமலையில் நடத்தினார் செந்தில் தொண்டமான்

Date:

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டை இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆரம்பித்துவைத்தார்.

இன்று 6ஆம் திகதி மற்றும் 7,8ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடைபெறுகின்றன.

உலக நாடுகளில் தமிழ்நாட்டை தாண்டி வேறு ஒரு நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஶ்ரீ முருகன் , சிறப்பு விருந்தினர்களாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ், செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன், இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த விசேட அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்துடன் இணைந்து ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. திருகோணமலையில் உள்ள போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...