தமிழரசு கட்சி தேர்தல் நாளை, இறுதி நேரத்தில் ஒரு போட்டியாளர் விடுத்த அதிர்ச்சி அறிவிப்பு

Date:

இலங்கை தமிழரசுக்கட்சியின் எனது அன்புக்குரிய பொதுச்சபை உறுப்பினர் அவர்களே! நான் சீனித்தம்பி யோகேஸ்வரன்.

வணக்கம் நாளை 21 ஆம் திகதி எங்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கான தலைவர் தேர்வுக்காக வாக்கெடுப்பு திருகோணமலையில் நடாத்தப்பட உள்ளது.

இவ்வாக்கெடுப்பில் பொதுச் சபை உறுப்பினரான தாங்கள் வாக்களிக்க உள்ளீர்கள். இந்நிலையில் தலைவர் போட்டியில் நானும் கலந்து கொள்கிறேன். ஆனாலும் இலங்கை தமிழரசுக்கட்சியில் தமிழ் தேசியத்தின் வெற்றிக்காகவும் தமிழ் பண்பாடுகளை அழிவுப்பாதையில் இருந்து காப்பதற்கு இன்றளவிலும் அயராது உழைக்கும் கட்சியாகும்.

இக்காட்சியில் தொடர்ந்தும் தமிழ் தேசியம் நிலைத்திருப்பதற்காக தமிழ் தேசியபற்றாளன் (கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்) சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.

நானும் தமிழ் தேசிய பற்றாளனாக இருந்தாலும் இன்று சர்வதேச மட்டத்திலும் நமது தமிழ் சமூகத்திலும் இன்றளவில் நற்பொயரும் சிறந்த செல்வாக்கும் பெற்றவராக (பாராளுமன்ற உறுப்பினர்) சிவஞானம் சிறிதரன் உள்ளார்.

ஆகவே தங்களது பொன்னான வாக்குகளை (கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்) சி.சிறிதரன் அவர்களுக்கு வழங்கி தமிழ் தேசியத்தை அழிவுப்பாதையில் இருந்து காத்து என்றும் எமது கட்சியில் தமிழ் தேசிய பண்பாடுகளை நிலைத்திருக்க உதவுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

எனக்கு எவ்விதத்திலும் நாளை நடக்கும் இத்தலைவர் தெரிவில் தங்களது வாக்குகளை வழங்க வேண்டாம் எனவும் அன்பாக கூறுகின்றேன்.

நன்றி. சீனித்தம்பி யோகேஸ்வரன்இலங்கை தமிழரசுக்கட்சி (தலைவர் பதவிக்காக வேட்பாளர்களில் ஒருவர்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...

ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ....

யூரியா உரத்தின் கையிருப்பு குறைவு

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கையில் யூரியா...