திருமலையில் சமத்துவப் பொங்கல், ஆளுநர் செந்திலுக்கு ‘கிழக்கின் நாயகன்’ விருது

Date:

நாட்டில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு ‘சமத்துவ பொங்கல்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த சமத்துவ பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு “கிழக்கின் நாயகன்” Man of the east விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் 14 சிவில் அமைப்புகளால் அனைத்து மதத்தினரும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மக்களும் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

ஆளுநர் செயலகத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி சிவில் சமூகங்களால் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு “கிழக்கின் நாயகன்” விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரலவும் கலந்து கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...