பல பக்கங்களில் இருந்தும் குறி வைக்கப்பட்ட றோயல் பீச் சமன்!

Date:

கொஸ்கொட சுஜீ, தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் ‘றோயல் பீச் சமன்’ மீது தாக்குதல் நடத்துவதற்கு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான உரகஹா மைக்கேலுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுஜியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான புஸ்ஸே ஹர்ஷவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ரோயல் பீச் சமன் அண்மையில் கொல்லப்பட்டார்.

‘யுக்திய’ நடவடிக்கையுடன் இணைந்ததாக காலியில் கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையின் போது விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

ரோயல் பீச் சமன் உள்ளிட்ட ஐவரை சுட்டுக் கொன்றதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் காலி, மாகல்ல மற்றும் சிவவல பிரதேசத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்போது துபாய் நாட்டில் பதுங்கியிருக்கும் கொஸ்கொட சுஜி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியே அவர்களைக் கொன்றது தெரியவந்தது.

9 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படைத் தளபதி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (மௌபிம)

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...