10 மணி நேர விசாரணையின் பின்னர் அமைச்சர் கெஹலிய அதிரடியாக கைது!

0
310

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்தார்.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் கொள்வனவு வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம சமர்ப்பித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம ரம்புக்வெல்லவுக்கு உத்தரவிட்டார்.

10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here