சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

Date:

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6 மணிமுதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இன்று காலை 6 மணி முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...